search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுரேஷ்ராஜன் எம்எல்ஏ"

    18 வயது நிரம்பிய வாக்காளர்களை விடுபடாமல் வாக்காளர் பட்டியலில் சேர்க்க திமுகவினர் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்று சுரேஷ்ராஜன் எம்எல்ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    நாகர்கோவில்:

    குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் 1-1-2019-ந் தேதியை 18 வயது தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்திட வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. எனவே தகுதி வாய்ந்த வாக்காளர்களின் பெயர்களை சேர்த்தல், நீக்குதல், திருத்தங்கள், முகவரி மாற்றம் செய்யவும் நேற்று முதல் அக்.31-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    அதன்படி படிவம் எண் 6 வாக்காளர் பெயர் சேர்த்தல், படிவம் 7 பெயர் நீக்கம் செய்தல், படிவம் 8ஏ பிழை திருத்தல், முகவரியில் தவறு இருந்தால், வேறு இடங்களுக்கு மாற்றம் செய்வோர் திருத்தம் செய்து கொள்ளலாம். மேலும் அந்தந்த வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் வரும் 9, 23, அக்டோபர் 7, 14 ஆகிய 4 நாட்கள் நடைபெற உள்ளது.

    எனவே அந்தந்த ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி மற்றும் கிளைக்கழக செயலாளர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் அனைவரும் தங்கள் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி முகவர்கள் இப்பணியில் ஈடுபட்டு 18 வயது நிரம்பிய வாக்காளர்களை விடுபடாமல் வாக்காளர் பட்டியலில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் இப்பணிகள் குறித்த விவரங்களை மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் ஒப்படைக்கவும், குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    குமரி மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்று சுரேஷ்ராஜன் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்.
    நாகர்கோவில்:

    குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ் ராஜன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் எல்லா இடங்களிலும் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

    மழை பாதிப்புக்கு உண்டான பகுதிகளில் அரசு விரைந்து நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். தொடர் மழையால் நாகர்கோவிலில் எல்லா பகுதியிலும் உள்ள சாலைகள் பாதிக்கப்பட்டு குண்டும், குழியுமாக காணப் படுகிறது. இதனால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் மிகவும் சிரமம் ஏற்பட்டு உள்ளது.

    குறிப்பாக சில இடங்களில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ள பாதையெல்லாம் மிகப்பெரிய குண்டும், குழியுமாகி விபத்துகள் ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சம் உருவாகி உள்ளது. உதாரணத்துக்கு வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து வடக்கு பகுதிக்கு செல்லும் பஸ்கள் வடசேரி கிராம நிர்வாக அலுவலகம் வழியாக சி.பி.எச். ரோடு, ஆறாட்டு ரோடு, எஸ்.எம்.ஆர்.வி. சந்திப்புக்கு வருகின்றன. இந்த சாலை அதிகளவில் குண்டும், குழியுமாக உள்ளது.

    இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் தவிக் கின்றன. இதேபோல் தெரிசனங்கோப்பு, வீர நாராயணமங்கலம் ஆகிய பகுதியில் உள்ள சாலைகள், திருப்பதிசாரம் முதல் தாழக்குடி செல்லும் சாலை போன்றவை முற்றிலும் சேதமடைந்துள்ளன.

    இதேபோல் நாகர்கோவில் நகர பகுதியில் அனைத்து சாலைகளும, கடலோர பகுதிகளில் உள்ள சாலைகளும் பழுதடைந்து காணப்படுகிறது. பல இடங்களில் குளங்கள் உடைந்து நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    எனவே விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும். குமரி மாவட்ட கலெக்டர், நாகர்கோவில் நகராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறை நிர் வாகம், நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைந்து போர்க்கால அடிப்படையில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    நாகர்கோவிலில் தி.மு.க. போராட்டத்திற்கு மட்டுமே அனுமதி மறுக்கப்படுகிறது என்று ஆர்ப்பாட்டத்தில் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ பேசினார். #propertytaxhike
    நாகர்கோவில்:

    சொத்து வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும், வரி உயர்வை திரும்ப பெற கோரியும் இன்று தி.மு.க.வினர் கண்டன போராட்டம் நடத்தினர். நாகர்கோவில் நகராட்சி முன்பு குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட் டம் நடந்தது. இதற்கு கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான சுரேஷ் ராஜன் தலைமை தாங்கினார். ஆஸ்டின் எம்.எல்.ஏ., பெர்னார்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். இதற்காகவே தி.மு.க. போராட்டம் நடத்துகிறது. குமரி மாவட்ட தி.மு.க. சார்பில் இங்கு போராட்டம் நடத்த போலீசாரிடம் முன்கூட்டியே அனுமதி கேட்டோம். அவர்கள் நேற்று அனுமதி மறுப்பதாக தெரிவித்தனர்.

    குமரி மாவட்டத்தில் பாரதீய ஜனதா கட்சி பைக் பேரணி நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. ஆளும் கட்சியினர் சாலை எங்கும் பேனர்கள் வைக்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் தி.மு.க.வினரின் போராட்டத்திற்கு மட்டும் அனுமதி மறுக்கப்படுகிறது. நாங்கள் இனி அனுமதி கேட்காமலேயே போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவில்லை. தேர்தல் நடத்தப்படுமானால் தி.மு.க. வெற்றிபெறும். அடுத்து தமிழகத்தில் தி.மு.க. தான் ஆட்சிக்கு வரும். மு.க.ஸ்டாலின் முதல்- அமைச்சர் ஆவார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆஸ்டின் எம்.எல்.ஏ. பேசியதாவது:- ஆளும் அ.தி.மு.க. ஆட்சியில் முட்டை கொள்முதலில் தொடங்கி பல்வேறு திட்டங்களிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. அ.தி.மு.க. அரசு மத்திய அரசின் அடிமையாகவே செயல்படுகிறது. உள்ளாட்சி தேர்தல் நடந்திருந்தால் மத்திய அரசின் ரூ.3,500 கோடி நிதி கிடைத்திருக்கும். இப்போது அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் கேட்சன், கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவு செயலாளர் தில்லை செல்வம், ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், தாமரைபாரதி, சற்குரு கண்ணன், அணி அமைப் பாளர்கள் ஆர்.எஸ்.பார்த்த சாரதி, சிவராஜ், சதாசிவம், எம்.ஜே.ராஜன், பாலஜனாதி பதி, சி.என்.செல்வன், ஷேக் தாவூது, செயற்குழு உறுப்பினர் சாய்ராம், சைமன் ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். அவர்கள் சொத்து வரி உயர்வை ரத்து செய்ய கேட்டு கோஷங்கள் எழுப்பினர். #propertytaxhike
    நாகர்கோவிலில் சொத்துவரி உயர்வை கண்டித்து 27-ந்தேதி தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்று சுரேஷ்ராஜன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
    நாகர்கோவில்:

    குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ் ராஜன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவில் நகராட்சி மற்றும் பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை சொத்து வரியை திடீரென்று உயர்த்தப்பட்டுள்ளது. அ.தி.மு.க. அரசு உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலை தோல்வி பயத்தின் காரணமாக தேர்தலை நடத்தாமல் இருப்பதால் மத்திய அரசிடமிருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைக்க வேண்டிய ரூ.3,500 கோடிக்கும் மேற்பட்ட நிதி இன்னமும் பெறப்படாமல் உள்ளது.

    மத்திய அரசின் மானிய உதவித்தொகைகளை பெற்று உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தாமல் வாடகை தாரர்கள், வணிகப் பெருமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், கஷ்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. வியாபாரிகளுக்கு ஜி.எஸ்.டி. வரியால் பாதித்து இருக்கின்ற நிலையில் சொத்து வரியை உயர்த்தி உள்ளது கண்டிக்கத்தக்கது.

    எனவே கடுமையான இந்த சொத்து வரி உயர்வை கண்டித்தும், அதனை உடனடியாக திரும்பப் பெறக் கோரியும், வருகிற 27-ந்தேதி காலை 10 மணிக்கு நாகர்கோவில் நகராட்சி அலுவலகம் முன்பு எனது தலைமையில் (சுரேஷ்ராஜன்) தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், கிளைக்கழக நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர்கள், வட்ட செயலாளர்கள், அணி அமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
    பார்வதிபுரம் மேம்பால பணியை விரைந்து முடிக்கா விட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

    நாகர்கோவில்:

    குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் 1.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கி பல மாதங்களாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

    மேலும் பள்ளி, கல்லூரிகள் ஜூன் 1-ந்தேதி திறக்க இருக்கிறது. இதனால் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதோடு, குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலக வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்படுவார்கள்.

    எனவே பள்ளி கல்லூரிகள் திறப்பதற்கு இரவு பகல் பாராமல் மேம்பாலப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். பஸ்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் செல்வதற்குரிய ஏற்பாடுகளை செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    மேலும் குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் மணி மேடையில் இருந்து கட்டப் பொம்மன் சந்திப்பு செல்லும் சாலையில் பாதாள சாக்கடைக்கு பள்ளங்கள் தோண்டப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் பணிகள் முடிவடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே குடிநீர் வடிகால் வாரியம் இந்த சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    இந்த இரு பணிகளையும் பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கு முன்பாக விரைந்து முடிக்கவில்லை என்றால் தி.மு.க. சார்பில் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×